Headlines
மணவாளக்குறிச்சி, பம்மத்துமூலை பகுதியை சேர்ந்த பெண் பிரவசத்தின் போது மரணம்: குடும்பத்தார் கண்ணீர்

மணவாளக்குறிச்சி, பம்மத்துமூலை பகுதியை சேர்ந்த பெண் பிரவசத்தின் போது மரணம்: குடும்பத்தார் கண்ணீர்

மணவாளக்குறிச்சி, பம்மத்துமூலை பகுதியை சேர்ந்த பெண் பிரவசத்தின் போது மரணம்: குடும்பத்தார் கண்ணீர்
13-02-2015
மணவாளக்குறிச்சி, பம்மத்துமூலை பகுதியை சேர்ந்தவர் நேவிஸ். இவரது மனைவி வளர்மதி (வயது 29). இவர் தக்கலை அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். வளர்மதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் நேற்று காலையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடனே குடும்பத்தார் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், அவரை திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து வளர்மதியில் உடல்நிலை மோசமானதாக இருந்துவந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வளர்மதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மாலையில் மரணம் அடைந்தார். பின்னர் அவரது உடல் மணவாளக்குறிச்சி, பம்மத்துமூலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. வீட்டில் அவரது உடலைப் பார்த்து குடும்பத்தார்கள் கண்ணீர் விட்டு அழுதனர். முதல் குழந்தை பிரவசத்தில் வளர்மதி இறந்தது, அப்பகுதியினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இன்று மாலை சுமார் 4 மணி அளவில் வளர்மதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: