
Announcements
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் மரணம்
மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்தவர் மரணம்
20-03-2015
மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன் பிரதாப் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் குடும்பத்துடன், தருவை பகுதியில் வசித்து வந்தார். பிரதாப் மணவாளக்குறிச்சி, சின்னவிளை ரோட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
![]() |
பிரதாப் |
மருத்துவமனை சிகிட்சைக்கு பின்னர் தருவையில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று (15-ம் தேதி) அதிகாலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமானதாக தெரிகிறது. அன்று காலை சுமார் 4 மணி அளவில் அவர் மரணமடைந்தார். அன்று மாலை 4 மணி அளவில் பிரதாப் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

0 Comments: