Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
09-04-2014
கேரளமாநிலம் பத்தனம்திட்டை பக்தியை சேர்ந்தவர் ஜாக்கோ. இவரது மகன் அபின் (வயது 22). இவர் மணவாளக்குறிச்சி அருகே வெள்ளமடி பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

நேற்று இவரும், இவரது நண்பர் அகில் தம்பி (20) ஆகியோர் சேர்ந்து முட்டத்தில் உள்ள மற்றொரு நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்துவிட்டு கல்லூரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அம்மாண்டிவிளை தெற்கூர் பகுதியில் வரும்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டோரம் நின்ற மின் கம்பத்தில் மோதியது. இதில் அபின் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

அகில் தம்பி படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு தீவிர சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரது சொந்த ஊர் கோட்டயம்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜா சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான அபின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: