Headlines
Loading...
கடியப்பட்டணம், முட்டத்தில் 250 விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுக நிவாரண உதவி

கடியப்பட்டணம், முட்டத்தில் 250 விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுக நிவாரண உதவி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அறிவுறுத்துதலின் படி கடியப்பட்டணம், முட்டம் ஆகிய மீனவர் கிராமங்களில் உள்ள விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 250 ஏழைகளுக்கு முட்டம் ஊராட்சி அதிமுக செயலாளர் லாரன்ஸ் சார்பில் கொரோனா நிவாரணமாக அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ், மாநில மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சிவ செல்வராஜன், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ், நாகர்கோவில் மாநகர் செயலாளர் ஜெயச்சந்திரன் என்ற சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முட்டம் மவுரின், பொன்சியான், அலெக்ஸ், ஜஸ்டின், ஜெயிலிஸ், பொலிக்கான், குமார், எட்வின், சேசையா, ஸ்டீபன், செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: