Headlines
மணவாளக்குறிச்சி பேரூராட்சி சார்பில் மாணவர்கள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மணவாளக்குறிச்சி பேரூராட்சி சார்பில் மாணவர்கள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மணவாளக்குறிச்சி பேரூராட்சி சார்பில் மாணவர்கள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
11-08-2015
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 மில்லி மைக்ரானுக்கு குறைவான அளவினை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்ய வேண்டும் எனபதை வலியுறுத்தி மணவாளக்குறிச்சி பேரூராட்சி சார்பில் மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா துவங்கி வந்தார். பேரூராட்சி செயல் அலுவலர் லிசி முன்னிலை வகித்தார். பேரணியின் போது பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. “பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம், துணிப் பைகளை கையில் எடுப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகளை மாணவர்கள் கைகளில் வைத்திருந்தனர்.
பேரணி பேரூராட்சி அலுவலகம் பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போட்டோஸ்
டைசன், M.A., B.Ed., M.Phil.
மணவாளக்குறிச்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: