Headlines
மணவாளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது

மணவாளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது

மணவாளக்குறிச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது
15-02-2016
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு 12-ம் தேதி மாலை 6.30 நடைபெற்றது. மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் மணவை கிளை செயலாளர் அய்யூப்கான் தலைமை தாங்கினார்.
உவைஸ் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட தலைவர் சுல்ஃபிகர் அலி வாழ்த்துரை வழங்கினார். குமரி மாவட்ட பொது செயலாளர் முஹம்மது நூஹ், மாவட்ட செயலாளர் நூர்தீன் பைசல், மணவை சாதிக் அலி, மணவை கிளை தலைவர் சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில செயற்குழு
உறுப்பினர் ஜாஃபர் உஸ்மானி ஆகியோர் சிறப்புரை வழங்கினார். மணவை கிளை துணை தலைவர் மஜீதுல் அர்ஷாத் நன்றியுரை வழங்கினார்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை மணவாளக்குறிச்சி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

செய்தி மற்றும் போட்டோஸ்
சபீக் ரஹுமான்

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: