Headlines
மணவாளக்குறிச்சியில் காதலனுடன் மகள் மாயம்: தந்தை விஷம் குடித்து  தற்கொலை

மணவாளக்குறிச்சியில் காதலனுடன் மகள் மாயம்: தந்தை விஷம் குடித்து தற்கொலை

03-10-2016
மணவாளக்குறிச்சி கொல்லன்விளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52). இவர் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு இவரது மகள் திடீரென்று மாயமாகி விட்டார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்ததாகவும் காதலனுடன் அவர் மாயமானதாகவும் கூறப்படுகிறது. மகள் மாயமானதில் இருந்து பாலகிருஷ்ணன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் தனது வீட்டில் வைத்து பாலகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். உடனே அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலகிருஷ்ணன் இறந்து விட்டார். இதுபற்றி பாலகிருஷ்ணனின் மகன் பிரவீன்பிரியன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது சகோதரி காதலனுடன் மாயமானதால் மனம் வேதனை அடைந்த தந்தை பாலகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருந்தார்.

இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள். மேலும் பாலகிருஷ்ணன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: