Headlines
மணவாளக்குறிச்சி அருகே போலி ரசீது தயாரித்து தனியார் நிறுவனத்தில் ரூ.4.35 லட்சம் மோசடி 2 ஊழியர்கள் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே போலி ரசீது தயாரித்து தனியார் நிறுவனத்தில் ரூ.4.35 லட்சம் மோசடி 2 ஊழியர்கள் மீது வழக்கு

30-09-2016
மணவாளக்குறிச்சி அருகே கல்படி பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இதை நாகர்கோவிலை சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சூரப்பள்ளம் சரல் பகுதியை சேர்ந்த நாராயணபெருமாள் (வயது 47), கிருஷ்ண குமார் (45) ஆகியோர் ‘பில்‘ கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யும் பணத்தில் முறைகேடு செய்வதாக நிறுவன உரிமையா ளருக்கு தெரியவந்தது.

உடனே அவர் இது பற்றி நிறுவன கணக்கு வழக்குகளை சரிபார்த்தார். அப்போது நாராயண பெருமாள், கிருஷ்ண குமார் இருவரும் நிறுவனத்தின் பெயரில் போலி ரசீது தயாரித்து வாடிக் கையாளர்களிடம் கொடுத்து பணத்தை வாங்கி நிறுவனத் திற்கு செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நிறுவன உரிமையாளர் செல்வநாயகம் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில்,“ தனது நிறுவனத்தில் பணிபுரியும் நாராயண பெருமாள், கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் நிறுவனத்தின் பெயரில் போலி ரசீது தயாரித்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 647 மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி கேட்ட போது, இருவரும் தன்னை தகாத வார்த் தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத் தனர்.“ என கூறியுள்ளார்.

இது பற்றி மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை நடத்தி, நாராயண பெருமாள், கிருஷ்ண குமார் ஆகியோர் மீது பணம் மோசடி, மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: