Headlines
குளச்சலில் ஜெயலலிதா விடுதலைக்காக வேண்டி மும்மத பிரார்த்தனை

குளச்சலில் ஜெயலலிதா விடுதலைக்காக வேண்டி மும்மத பிரார்த்தனை

குளச்சலில் ஜெயலலிதா விடுதலைக்காக வேண்டி மும்மத பிரார்த்தனை
02-10-2014
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் விதித்த தண்டனையில் இருந்து ஜெயலலிதா விடுதலைக்காக வேண்டி குமரி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் குளச்சலில் மும்மத பிரார்த்தனை நடந்தது.
குளச்சல் அக்கரை பள்ளிவாசல் தர்ஹாவில் பிரார்த்தனையும், குளச்சல் சாம்பவசிவபுரம் சிவன் கோவிலில் வழிபாடும், குளச்சல் மரமடி அந்தோணியார் கோவிலில் பிரார்த்தனையும் நடைபெற்றது.
பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். குளச்சல் நகர செயலாளர் அருள்தாஸ், சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகராஜா, நகர துணை அமைப்பாளர் தாசீம், அம்பிளிகலா, ஆண்ட்ரோஸ், வேல்தாஸ், பசீர் கோயா, கவுன்சிலர்கள் ஆன்றனிராஜ, தாகூர், தர்மராஜ், பெலிக்ஸ்ராஜன், லலிதா, ராஜ் உசேன்கண், நாசர், பிரின்ஸ்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: