
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சியில் சுரபி கல்வி அறக்கட்டளையின் இலவச மகளிர் தையல் பயிற்சி துவக்கம்
மணவாளக்குறிச்சியில் சுரபி கல்வி அறக்கட்டளையின் இலவச மகளிர் தையல் பயிற்சி துவக்கம்
24-03-2014
நாகர்கோவிலில் இயங்கி வரும் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் இலவச மகளிர் தையல் பயிற்சி நிலையம் மணவாளக்குறிச்சி முகுந்தன் மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள பிஜூ மகளிர் தையலகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி அளவில் இலவச தையல் பயிற்சி மையத்தை மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா திறந்து வைத்தார்.தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உதவி அதிகாரி சோபியா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். குமார் வரவேற்று பேசினார்.
தையலக ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சேவியர் நன்றியுரை வழங்கினார். மணவாளக்குறிச்சி கூட்டுறவு சங்க தலைவர் எம்எஸ்எம் பசீர், புதியபுயல் முருகன், மணவை சலிம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
contact -95434 66583 for classes
ReplyDeleteManavai murugan- 94429 63959