
Manavai News
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது: வாகனம் மூலம் விழிப்புணர்வு
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது: வாகனம் மூலம் விழிப்புணர்வு
08-08-2015
மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா, செயல் அலுவலர் லிசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எவ்வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த வேண்டும், எவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவைகள் குறித்த விழிப்புணர்வுகளை பேரூராட்சி சார்பில் வாகனம் மூலம் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அரசு தடைபடுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
0 Comments: