Headlines
மணவாளக்குறிச்சியில் சாலையை செப்பனிட கோரி பா.ஜனதா தர்ணா

மணவாளக்குறிச்சியில் சாலையை செப்பனிட கோரி பா.ஜனதா தர்ணா

மணவாளக்குறிச்சியில் சாலையை செப்பனிட கோரி பா.ஜனதா தர்ணா
23-02-2016
ராஜாக்கமங்கலம் முதல் குளச்சல் வரையும், மணவாளக்குறிச்சி முதல் திங்கள்நகர் வரையும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் பணி மேற்கொள்ளவில்லை என மாநில அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் மணவாளக்குறிச்சியில் நடந்தது. பேரூர் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அய்யப்பன், மணிகண்டன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாண்சன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞர் அணி துணைத்தலைவர் அய்யப்பன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ஜெகன் சந்திரகுமார், காளி, ஒன்றிய பார்வையாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மாவட்ட மகளிரணி துணைத்தலைவி வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: