Headlines
மணவாளக்குறிச்சியில் சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

மணவாளக்குறிச்சியில் சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

மணவாளக்குறிச்சியில் சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
12-07-2016
மணவாளக்குறிச்சி, குளச்சல், ராஜாக்கமங்கலம், திங்கள்நகர், பிள்ளையார்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள குண்டும்–குழியுமான சாலைகளை சீரமைக்கக்கோரி, குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் புவனேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், ஒன்றியக்குழு செயலாளர் புஷ்பதாஸ், நிர்வாகி எஸ்தர்ராணி உள்பட பலர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 27 பேரை கைது செய்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: