Headlines
மணவாளக்குறிச்சி அருகே கணவரை மிரட்டுவதற்காக, உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்த இளம்பெண்

மணவாளக்குறிச்சி அருகே கணவரை மிரட்டுவதற்காக, உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்த இளம்பெண்

மணவாளக்குறிச்சி அருகே கணவரை மிரட்டுவதற்காக, உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்த இளம்பெண்
09-07-2016
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இவருக்கு 30 வயதுடைய மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விடுமுறை முடிந்து நேற்று காலை மீண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல அவர் தயாராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கணவரை பயமுறுத்துவதற்காக இளம்பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றினார். பின்னர் தீவைக்கப்போவதாக கூறி மிரட்டுவதற்காக தீயை பற்றவைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென இளம்பெண் மீது தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவர் வலியால் அலறித்துடித்தார். உடனே கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீயில் கருகிய இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மனைவி தீயில் கருகியதால் அவர் நேற்று வெளிநாட்டிற்கு செல்லவில்லை.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: