Headlines
குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
09-07-2016
படித்தவர்கள் அதிகம் நிறைந்த குமரி மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் உள்ள நிலையில் பல்கலைக்கழகம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய காங்கிரஸ் மாநில நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன், நகர காங்கிரஸ் தலைவர் மாகின், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் தங்கம் நடேசன், நிர்வாகிகள் தங்கசாமி, அசோக்ராஜ், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: