Headlines
மணவாளக்குறிச்சியில் கல்லூரி முன்பு மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது

மணவாளக்குறிச்சியில் கல்லூரி முன்பு மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது

மணவாளக்குறிச்சியில் கல்லூரி முன்பு மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது
19-02-2016
மணவாளக்குறிச்சியில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளை வாலிபர்கள் சிலர் அடிக்கடி கேலி– கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து வாலிபர்களை கல்லூரி நிர்வாகிகள் கண்டித்தனர்.
அதன் பிறகும் சில வாலிபர்கள் தொடர்ந்து கல்லூரி வாசல் முன்பு நின்றபடி மாணவிகளை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் இது போல காரில் வந்த 2 வாலிபர்கள் மாணவிகளை மிகவும் மோசமாக கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இது பற்றி அறிந்ததும் கல்லூரி ஆசிரியர்கள் சிலர் அந்த வாலிபர்களை கண்டித்தனர். அவர்கள் ஆசிரியர்களை தாக்க முயன்றதோடு கல்லூரி காவலாளியையும் அடித்தனர். உடனே கல்லூரி முதல்வர் அய்யாத்துரை இது பற்றி மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் மாணவிகளை கிண்டல் செய்ததோடு, ஆசிரியர்களை தாக்கிய வாலிபர் ஒருவரை கல்லூரி நிர்வாகத்தினர் பிடித்துக் கொண்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் இன்னொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட வாலிபரை கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகளை கிண்டல் செய்தது தக்கலையை அடுத்த மூலச்சலைச் சேர்ந்த பாலமுருகன் (வயது31), அவரது நண்பர் ஜெகதீசன் என தெரியவந்தது. இவர்களில் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய ஜெகதீசனை போலீசார் தேடி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: