Headlines
மணவாளக்குறிச்சியில் ரம்சான் பெருநாளை முன்னிட்டு  நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

மணவாளக்குறிச்சியில் ரம்சான் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

மணவாளக்குறிச்சியில் ரம்சான் பெருநாளை முன்னிட்டு
நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்
08-08-2013
மணவாளக்குறிச்சியில் ரம்சான் திருநாள் மிகச்சிறப்பாக இன்று கொண்டாபட்டு வருகிறது. காலையில் பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக பல்வேறு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சிறுமியர்களுக்கான குப்பியில் தண்ணீர்
நிறைத்தல் போட்டி நடைபெற்ற காட்சி
அதன்படி, காலை முதல் சிறுவர், சிறுமியர்களுக்கான பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாலையில் திருமணம் ஆனவர்களுக்கான வடம் இழுத்தல் போட்டி, இளைஞர்களுக்கான வடம் இழுத்தல் போட்டி, வாலிபால் போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டன.
சிறுவர்களுக்கான செயர் சுற்றல்
மேலும் கபடி போட்டி உள்பட பல போட்டிகள் நாளை நடைபெற உள்ளன. மேலும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் இரவு 8 மணிக்கு நாகர்கோவில் கலாச்சார கழக பள்ளிவாசல் இமாம் மௌலவி சவுக்கத் அலி உஸ்மானி, விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் தொல். திருமாவளவன், எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள் சிறப்புரை வழங்குகின்றனர்.
வடம் இழுத்தல் போட்டி நடைபெற்ற காட்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: