Headlines
Loading...
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலி

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலி

மணவாளக்குறிச்சி கொடிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது 32). இவர் குளச்சல் மின்வாரிய அலுவலக மின் ஊழியர்களுடன் உதவியாளராக வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இவர் குளச்சலுக்கு மின் ஊழியர் பென்னட்(54) என்பவருடன் வேலைக்கு சென்றார். பர்னட்டிவிளையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறும் போது எதிர்பாராத விதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மின் ஊழியர் பென்னட் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சுரேசுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் சந்திரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: