Headlines
மணவாளக்குறிச்சியில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

மணவாளக்குறிச்சியில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர்(வயது53). இவர் மணவாளக்குறிச்சியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு 1 மணியளவில் சூப்பர் மார்க்கெட்டின் உள்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைபார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் முகம்மது பஷீருக்கு தகவல் தெரிவித்தனர்.
அத்துடன், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி அண்ணாத்துரை தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூப்பர் மார்க்கெட்டில் எரிந்து கொண்டிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும், சூப்பர் மார்க்கெட்டின் கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து தரைமட்டமானது. தீ விபத்தில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்குமென்று கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: