Headlines
முட்டம் கடற்கரையில் பிணமாக கிடந்த ஆந்திர மீனவர்:  போலீசார் விசாரணை

முட்டம் கடற்கரையில் பிணமாக கிடந்த ஆந்திர மீனவர்: போலீசார் விசாரணை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கீதா அப்பாசாமி (வயது 41). இவர் குமரி மாவட்டம் முட்டத்தில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவருடன் தங்கி இருந்த மீனவர்கள் படகில் கடலுக்குள் செல்ல தயாரானார்கள். அவர்கள் கீதா அப்பாசாமியை தேடிய போது, அவர் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரை கடற்கரையில் தேடினர்.

அப்போது, மாயமான கீதா அப்பாசாமி, முட்டம் துறைமுகம் பகுதி கடற்கரையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குளச்சல் கடலோர காவல்படை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மீனவர் கீதா அப்பாசாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: