Headlines
மாவட்ட கபடி போட்டி திருநயினார்குறிச்சி அணிகள் வெற்றி

மாவட்ட கபடி போட்டி திருநயினார்குறிச்சி அணிகள் வெற்றி

நாஞ்சில் விளையாட்டு மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவில் கபடி மற்றும் ஓட்டப்பந்தயம் இரண்டு நாட்கள் குலசேகரம் காமராஜர் விளையாட்டு அரங்கில் நடந்தது.

கபடி போட்டியை திமுக குமரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். ஓட்டப்பந்தயத்தை குலசேகரம் சப்இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், மன்ற ஆலோசகர் கள் மோகன் ராஜ், ஜோய், ஆகியோர் துவக்கி வைத்தனர். இரு போட்டிகளிலும் மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண் டனர்.

கபடி இறுதி போட்டியில் திருநயினார்குறிச்சி எ அணி முதல் பரிசையும், பி அணி இரண்டாவது பரிசையும், நாஞ்சில் அணி மூன்றாவது பரிசையும், மூலச்சல் அணி நான்காவது பரிசையும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வழக்கறிஞர் ஜாண் கிறிஸ்டோபர், தொழிலதிபர் கேட்சன், மேல்பு றம் ஒன்றிய திமுக செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், மாவட்ட ரப்பர் விவசாய சங்க செயலாளர் பால சந்திரன் நாயர், மேற்கு மாவட்ட தேமுதிக பொருளாளர் டல்லஸ் மற்றும் பிரசாத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: