Headlines
மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் புனித ரம்சான் சிறப்பு தொழுகை நடைபெற்றது

மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் புனித ரம்சான் சிறப்பு தொழுகை நடைபெற்றது

மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில்
புனித ரம்சான் சிறப்பு தொழுகை நடைபெற்றது
08-08-2013
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களில் புனித திருநாளான ரமலான் பெருநாள் குமரி மாவட்டத்தில் இன்று (08-08-2013) கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு 8.30 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது.
மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் இன்று காலை 7.30 மணி அளவில் பெண்களுக்கான சிறப்பு தொழுகையும், காலை 9 மணிக்கு ஆண்களுக்கான தொழுகையும் நடந்தது. பின்னர் ஒருவருக்கொருவர் ரம்சான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இதை தொடர்ந்து சிறுவர், சிறுமியரின் விளையாட்டு போட்டிகள் பீச்ரோடு மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது

மேலும் புகைப்படங்களை காண.... க்ளிக் செய்யவும்...

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: