Headlines
மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியை சேர்ந்த மீனவர் ஜீப் மோதி பலி

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியை சேர்ந்த மீனவர் ஜீப் மோதி பலி

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை பகுதியை சேர்ந்த மீனவர் ஜீப் மோதி பலியானார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இங்கு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போலீஸ் வாகனத்தில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் ஒரு ஜீப்பில் ரோந்து சென்ற போலீசார், மணவாளக்குறிச்சி மற்றும் பரப்பற்று வழியாக சென்று கொண்டிருந்தனர்.
பெரியவிளை சந்திப்பு பகுதியில் போலீசார் ஜீப்பை நிறுத்தி கீழே இறங்கினர். டிரைவர் மட்டும் ஜீப்பை பெரியவிளை சந்திப்பு வளைவில் திருப்ப முயன்றார்.அப்போது அந்த வழியாக மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்த மீனவர் ஜார்ஜ் (வயது 55) என்பவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக போலீஸ் ஜீப், சைக்கிளில் சென்ற ஜார்ஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜார்ஜ், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: