Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது
07-03-2015
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 12 மணிக்கு மஹாபூஜை என்னும் வலியபடுக்கை பூஜை நடைபெற்றது. இந்த பூஜை மாசி திருவிழாவின் 6-ம் நாள் விழா, மீனபரணி கொடைவிழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் நடத்தப்படும். பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழவகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்க்கங்கள் படைக்கப்பட்டன.
நேற்று காலை 4.30 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.
மாநாட்டு பந்தலில் காலை 8 மணிக்கு பக்தி இன்னிசையும், காலை 10 மணிக்கு மகாபாரதம் தொடர் விளக்க உரையும், பகல் 12 மணிக்கு பக்தி பூஜையும், நண்பகல் 2 மணிக்கு மாதவிளை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை வழங்கிய சிந்தனை சொல்லரங்கம் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கதாகலாஷேபம் மற்றும் இன்னிசையும், இரவு 8 மணிக்கு சமய மாநாடும், இரவு 10 மணிக்கு கைரளி டிவி காந்தர்வ சங்கீதம் விருதுபெற்ற அபிலாஷ் வழங்கிய மாபெரும் கர்நாடக இன்னிசை நிகழ்வும் நடைபெற்றது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: