Headlines
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம்

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம்

மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம்
06-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 5-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 3 மணிக்கு மணவாளக்குறிச்சி, பேச்சி விளாகம் அருள்மிகு இசக்கியம்மன் கோவிலில் இருந்து சந்தனக் குடங்களுடன் யானை மீது களபம், தேர்மாலையுடன் அலங்கார ஊர்தியில் ஊர்வலம் மண்டைக்காடு வந்தது.
மாநாட்டு பந்தத்தில் காலை 8 மணிக்கு பக்தி பஜனையும், மதியம் 12 மணிக்கு சமய மாநாடும், பிற்பகல் 2.30 மணிக்கு கேரளா, செங்கல் ராதாகிருஷ்ணனின் ஹரிநாம கீர்த்தனம் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு கர்நாடக இன்னிசையும் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு சமய மாநாடும், இரவு 10.30 மணிக்கு தக்கலை அபிநயா கலைக்குழு வழங்கிய நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 2 மணிக்கு பக்தி திரைப்படம் காண்பிக்கப்பட்டது. 5-ம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் மணவாளக்குறிச்சி மணல் ஆலை பணியாளர்கள் செய்திருந்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: