Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 3-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 3-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 3-ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
04-03-2015
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 3-ம் நாள் திருவிழா நிகழ்ச்சியில் காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பகல் 1 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 3 மணிக்கு கீழக்கரை அருள்மிகு சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து யானை ஊர்வலம் புறப்பட்டு, உண்ணிகிருஷ்ணன் கோவில் வழியாக மண்டைக்காடு ஆலயம் வந்து சேர்ந்தது.
யானை மீது களப பவனி வந்த காட்சி
சமய மாநாடு பந்தல் நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் வனிதா பஜனை சங்கமம் வழங்கிய கரிக்கம் பகவதி நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மகாபாரதம் தொடர் விளக்க உரையும், பகல் 1 மணிக்கு சமய மாநாடும், மாலை 3.30 மணிக்கு குமரி மாவட்டம் கம்பன் கழகம் வழங்கிய பக்தி பட்டிமன்றமும் நடந்தது.
அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல்
மாலை 5 மணிக்கு நாஞ்சில் மணிகண்டனின் பக்தி இன்னிசையும், 6.30 மணிக்கு ஆன்மிக உரையும், இரவு 8 மணிக்கு சமய மாநாடும், இரவு 11 மணிக்கு கேரள மாநிலம் வக்கம் நரேந்திரன் நாயர் வழங்கிய கதகளி நிகழ்ச்சியும் நடந்தது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: