Headlines
மணவாளக்குறிச்சியில் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

மணவாளக்குறிச்சியில் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

03-10-2016
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் வடக்கு கண்ணக்குறிச்சியைச் சேர்ந்தவர் வைரவன். இவரது மனைவி பகவதி (வயது 65).

இவர்களது மகன் அனுகுமார் (36), ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் தாயார் பகவதியை ஏற்றிக்கொண்டு திருவிதாங்கோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் இருவரும் வீடு திரும்பினார்கள். ஆட்டோவை அனுகுமார் ஓட்டி வந்தார். மணவாளக்குறிச்சி அருகே காருபாறை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த பகவதிக்கு தலை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அனுகுமாரும் காயமடைந்தார்.

இருவரையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் பகவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பகவதியின் மகள் அனிதா, மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தேவ சகாயம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: