
சுற்றுவட்டார செய்திகள்
கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
10-02-2016
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மனைவி மேரி கில்டா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். டேவிட் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மேரி கில்டா தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இதில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது மகள் லின்சி ராணி (வயது 20).
இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-வது ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் லின்சி ராணி செமஸ்டர் கல்வி கட்டணம் செலுத்த மேரி கில்டாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் பணம் இல்லை. இதனால் மேரி கில்டா ஒரு சில நாட்களில் பணம் தருவதாக கூறியுள்ளார்.
உடனே கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லையே என மனமுடைந்த லின்சிராணி நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அவர் அலறித்துடித்தார். உடனே மேரிகில்டா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று லின்சி ராணியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று லின்சி ராணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேரி கில்டா குளச்சல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments: