Headlines
மணவாளக்குறிச்சி அருகே கேமிரா செல்போன் மூலம் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர்

மணவாளக்குறிச்சி அருகே கேமிரா செல்போன் மூலம் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர்

மணவாளக்குறிச்சி அருகே கேமிரா செல்போன் மூலம் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர்
02-10-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள உரப்பனவிளையை சேர்ந்த ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் என்ஜினீயரிங் கல்லூரியிலும், 2–வது மகள் தனியார் கலை அறிவியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

இவர்களின் வீட்டின் பின்புறம் குளியலறை உள்ளது. அந்த அறைக்கு நேர் எதிரே உள்ள மொட்டை மாடியில் கடந்த சில நாட்களாக ஒரு சோப்பு டப்பா தொங்கியபடி இருந்தது. இதைப் பார்த்த மாணவிகள் சந்தேகமடைந்தனர். அவர்கள் அந்த சோப்பு டப்பாவை எடுத்து பார்த்தனர். அப்போது அந்த டப்பாவுக்குள் சிறிய ரக நவீன செல்போன் ஒன்று இருந்தது. அந்த செல்போனின் கேமிரா மாணவிகளின் வீட்டு குளியலறையை நோக்கி படம் பிடித்த வண்ணம் இருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் இதுகுறித்து அவரது தந்தையிடம் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்தார். போலீசார் அந்த செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது அதில் மாணவிகளின் குளியல் காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போன் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடையது என்பது தெரிய வந்தது. ஒயரிங் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்த அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் அந்த வாலிபர் மட்டும் தான் ஈடுபட்டாரா? அல்லது வேறு வாலிபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: