Headlines
குமரி மாவட்டத்தில் வருகிற 15-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் வருகிற 15-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் வருகிற 15-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு
02-10-2014
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வரைவு வாக்காளர் பட்டியல் 15-10-2014 அன்று வெளியிடப்பட உள்ளது. இதைதொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தல் வருகிற 15-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் தங்களது பெயரை வாக்காளராக பதிவு செய்வது, நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய உரிய படிவங்களை சம்பந்தப்பட்ட சார் கலெக்டர், கோட்டாட்சியாளர், தாசில்தார் மற்றும் நகரசபை அலுவலகங்களிலும் பெற்று நிரப்பி வழங்கலாம்.
மேலும் இதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 19-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதிகளில் அந்தந்த பகுதி வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் படிவங்களை www.elections.tn.gov.in/eregistration என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யுமாறும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: