Headlines
மணவாளக்குறிச்சி பகுதியில் மத்திய மந்திரி  பொன்.ராதாகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

மணவாளக்குறிச்சி பகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

மணவாளக்குறிச்சி பகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
09-09-2014
குருந்தன்கோடு ஒன்றியத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 2-ம் கட்டமாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து காருபாறையில் தொடங்கி கல்படி, திருநயினார்குறிச்சி, அம்மாண்டிவிளை, முட்டம், கடியப்பட்டணம் வழியாக மணவாளக்குறிச்சிக்கு வந்தார்.
மணவாளக்குறிச்சி பகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேரூர் பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரூர் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் ரமேஷ், செயலாளர் தங்கப்பன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், பொதுசெயலாளர் பாலசுப்பிரமணியன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், லிங்கேஸ்வரன், சஜீவன், வெங்கடாசலம், செல்லசுவாமி, ஜாண்சன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது “குமரி மாவட்டத்தில் வருகிற 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்யப்படும். திமுக மற்றும் சில கட்சிகள் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகி நிற்கின்றன. ஆனால் பா.ஜனதா கட்சி போட்டியிடுகிறது. ஆனால் போட்டியிடும் இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: