Headlines
சவுதி அரேபியாவில் குமரி மாவட்ட தொழிலாளி பலி

சவுதி அரேபியாவில் குமரி மாவட்ட தொழிலாளி பலி

சவுதி அரேபியாவில் குமரி மாவட்ட தொழிலாளி பலி
11-09-2014
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பரக்குன்று பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜோசப் (வயது 55). கூலி தொழிலாளியான இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். சவுதி அரேபியாவில் ரியாத் நகர் பகுதியில் கடந்த 5-ம் தேதி லிப்ட் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது தவறி விழுந்து, படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் அவரது உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பிரான்சிஸ் ஜோசப் உடல் விமானத்தில் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பலியான பிரான்சிஸ் ஜோசப்புக்கு பேபி (வயது 52) என்ற மனைவியும், பியூலா (30), பீனா (27), பின்கா (23), பிஸ்மி (20) ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: