Headlines
தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம்
19-09-2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம்புதூரில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் காஜா நூஹ் தலைமை வகித்தார். மந்தாரம்புதூர் கிளை நிர்வாகி மு.காஜா முகைதீன் வரவேற்றார். இஸ்லாம் அமைதி, சமாதானத்தை கடைப்பிடிக்கும் மார்க்கம் என்பதை வலியுறுத்தியும், தீவிரவாதத்தை எதிர்த்து மக்களிடையே பிரசாரம் செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி மந்தாரம்புதூர், பஞ்சலிங்கபுரம், தக்கலை, கன்னியாகுமரி, கோட்டாறு, களியக்காவிளை உள்ளிட்ட 33 கிளை அமைப்புகள் சார்பில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் ஜலீல், செயலர் ஹமீது, பொருளாளர் ஜாபர், மாவட்ட நிர்வாகிகள் சாகுல், அக்பர், அப்துல்லா, காதர், ஆலீம்கள் லுக்மான், நிஷார், கபீர், பாபுல், கிளை நிர்வாகிகள் சைபுல்லா, மைதீன், முஜிபுர் ரஹ்மான், கனி, லத்தீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

1 comment

  1. நல்ல விஷயம், இதை உலகிலுள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புக்களும் பின்பற்றலாம்!

    ReplyDelete