Headlines
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 15-ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது

மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 15-ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது

மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 15-ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது
13-08-2014
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 15-ம் தேதி துவங்கி இம்மாதம் 24-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலை 6.15 மயிலோடு பங்குதந்தை சேவியர் பெனடிக்ட் தலைமையில் திருக்கொடி ஏற்றப்படுகிறது. 2-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு சின்னவிளை பங்குதந்தை பெஞ்சமின் போஸ்கோ தலைமையில் செபமாலையும், 3-ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு மறைக்கல்வி மன்ற விளையாட்டு போட்டியும், மாலை 6.30 மணிக்கு மாங்குழி பங்குதந்தை ரோமறிங் ததேயுஸ் தலைமையில் செபமாலையும், 4-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு இனையம் இணைபங்குதந்தை தலைமையில் செபமாலையும், 5-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு தட்டான்விளை பங்குதந்தை ஸ்டனிஸ்லாஸ் தலைமையில் ஜெபமாலையும் நெடைபெருகிறது.
6-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு களிமார் பங்குதந்தை மரிய கிளாட்ஸ்டன் தலைமையில் ஜெபமாலையும், 7-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு ஆரோக்கியபுரம் பங்குதந்தை பிறிமா சிங் தலைமையில் ஜெபமாலையும், இரவு சமபந்தி விருந்தும், 8-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு பெரியவிளை பங்குதந்தை ஜோசப் தலைமையில் ஜெபமாலையும், 9-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு முளகுமூடு மறைவட்ட அருட்தந்தை சகாயதாஸ் தலைமையில் ஜெபமாலையும், 10-ம் நாள் விழாவில் மாலை 5.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, இரவு 9 மணிக்கு காப்புக்காடு சிற்பி தியேட்டர்ஸ் வழங்கும் “புனித அருளானந்தர்” எனும் நாடகம் நடைபெறும், விழா நிகழ்ச்சிகளை பங்குதந்தை மற்றும் பங்குபேரவை மக்கள் செய்து வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: