Headlines
மணவாளக்குறிச்சி பள்ளிரோடு மழையால் சேதமடைந்த பகுதி - வார்டு கவுன்சிலர் தலைமையில் சீர்செய்யப்பட்டது

மணவாளக்குறிச்சி பள்ளிரோடு மழையால் சேதமடைந்த பகுதி - வார்டு கவுன்சிலர் தலைமையில் சீர்செய்யப்பட்டது

மணவாளக்குறிச்சி பள்ளிரோடு மழையால் சேதமடைந்த பகுதி -
வார்டு கவுன்சிலர் தலைமையில் சீர்செய்யப்பட்டது
09-06-2013
மணவாளக்குறிச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. இதனால் மழை நீர் பல பகுதிகளில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
மழைநீர் தேங்கிய ரோடு சரிசெய்யப்படுகிறது.
இந்நிலையில் மணவாளக்குறிச்சியில் இருந்து ஆறான்விளை, காந்தாரிவிளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தண்ணீர் தேங்கியதால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அப்பகுதிக்கு செல்லும் வாகனங்களும் தண்ணீரில் மிதந்தவாறு சென்றன.
மழைநீர் தேங்கிய பகுதி
இதை தொடர்ந்து நேற்று அப்பகுதியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் அப்துல் சலாம் (13-வது வார்டு உறுப்பினர்) தலைமையில் பொதுமக்களும் சேர்ந்து தண்ணீர் தேங்கிய சாலையில் கற்கள் மற்றும் மணல் கொண்டு நிரப்பி சீர்செய்தனர்.

தற்போது சீர்செய்யப்பட்ட சாலையில் பொதுமக்கள் சிரமமின்றி நடந்து செல்கின்றனர். மேலும் இப்பணியில் SDPI-யை சேர்ந்த இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தகவல்
சமீக் ரகுமான்

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: