Headlines
Loading...
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சுழல்வேல் காவடி

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சுழல்வேல் காவடி

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சுழல்வேல் காவடி
19-05-2013
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுழல்வேல் காவடி பவனி சென்றது. 

மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து 2-வது வருடமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுழல்வேல் காவடி, 10 அடி வேல் போன்றவை புறப்பட்டு சென்றது. இது தொடர்பான நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெற்றது.

 முதல் நாள் நிகழ்ச்சியில் காலையில் தீபாராதனை நிகழ்வும், மாலையில் பஜனையும், இரவில் காவடி அலங்கரித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 2-ம் நாள் (நேற்று) நிகழ்வில் காலையில் வேல் காவடி ஊர்வலமும், மதியம் அன்னதான நிகழ்வும், மாலையில் சுழல்வேல் காவடி ஊர்வலம் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து காவடி ஊர்வலம் அம்மாண்டிவிளை, வெள்ளமடி, இராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் சென்றது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: