Headlines
Loading...
வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்–மாமனார் படுகொலை

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்–மாமனார் படுகொலை

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்–மாமனார் படுகொலை
19-05-2013
நாகர்கோவில் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 55), பெயிண்டர். இவருடைய மகன் சிவா (21), பட்டதாரி வாலிபர். இவர் ஒருமுறை நண்பருக்கு போன் பேசுவதற்காக அடித்த கால் வேறு ஒருவருக்கு மிஸ்டு காலாக சென்றது. அந்த மிஸ்டு காலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த சவுமியா (21) என்பவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து சிவா, சவுமியா ஆகியோர் அடிக்கடி பேசிக்கொண்டனர். இந்த பேச்சு அவர்கள் இடையே காதலாக மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வெறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சவுமியாவுக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர். சவுமியாவின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்தது. உடனே வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள்.

இதனால் சவுமியா வீட்டை விட்டு வெளியேறி சிவாவை தேடி நாகர்கோவில் வந்தார். அவர்கள் இருவரும் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வடசேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 7–ந் தேதி தஞ்சம் அடைந்தனர். அப்போது சவுமியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சவுமியாவின் அண்ணன் கார்த்திக் நாகர்கோவில் வந்தார். அவர் தங்கையின் கால்களில் விழுந்து தன்னுடன் வந்து விடுமாறு கெஞ்சி உள்ளார். ஆனார் சிவாவுடன் தான் வாழ்வேன் என்று சவுமியா கூறி விட்டார். இதனால் போலீசார் சிவாவுடன் சவுமியாவை அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சிவா நாகர்கோவில் வாத்தியார்விளை ரோட்டில் புதிதாக வீடுபார்த்து அங்கு குடியேறினார். சிவாவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவருடனே தந்தை ஜெயராமும் தங்கினார். சவுமியா தனிக்குடித்தனம் சென்றதும் அவர்கள் சித்தி மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் வந்து பார்த்து சென்றனர். இந்த நிலையில் சவுமியாவின் மூத்த அண்ணன் சபரி நண்பர்கள் 2 பேருடன் காரில் நேற்று தங்கை வீட்டுக்கு வந்தார். அவர்களுக்கு மதியம் இறைச்சி எடுத்து சவுமியா சமைத்து போட்டார்.

தங்கை வீட்டில் சாப்பிட்டு விட்டு சபரி நண்பர்களுடன் காரில் ஏறி வெளியே சென்றார். மறுபடியும் மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் சவுமியா, சிவா, ஜெயராம் ஆகிய 3 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்தும் வயிற்று பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது இதனால் சிவா வீட்டில் இருந்து ரத்தம் சொட்டச்சொட்ட தப்பி வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் ஜெயராம் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் படுகாயத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து ரோட்டில் விழுந்தார். 
உடனே கொலையாளிகள் அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்றனர். இதை பார்த்தவர்கள் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், வடசேரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். படுக்கை அறையில் சவுமியா கழுத்து அறுக்கப்பட்டு, வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதில் படுகாயம் அடைந்த ஜெயராம், சிவா ஆகிய 2 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயராமை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். சிவாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கும் கழுத்து அறுக்கப்பட்டு உள்ளது. மேலும் நெஞ்சில் கத்திக்குத்து விழுந்து உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வீட்டில் சமையில் அறையில் சமைத்த சாதம் அப்படியே திறந்து கிடந்தது. சாப்பாட்டு அறையில் சாப்பிட பரிமாறி இருந்த சாப்பாடும் திறந்து கிடந்தது. வீடு முழுவதும் ரத்தமயமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அந்த வீடு முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி விட்டனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை பற்றி தகவல் அறிந்ததும், அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகள் வில்லுக்குறி அருகே காரை நிறுத்திவிட்டு, ஆட்டோவில் அங்கிருந்து தக்கலை சென்றனர். இதனால் கொலையாளிகள் சென்ற காரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இரட்டைக்கொலை தொடர்பாக வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Thanks To 'Dailythanthi'

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: