Headlines
மணவாளக்குறிச்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான புகைப்படம்/கைரேகை/விழித்திரை பதிவு முகாம்

மணவாளக்குறிச்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான புகைப்படம்/கைரேகை/விழித்திரை பதிவு முகாம்

மணவாளக்குறிச்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான புகைப்படம்/கைரேகை/விழித்திரை பதிவு முகாம்
02-02-2013
மணவாளக்குறிச்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான புகைப்படம்/கைரேகை/விழித்திரை பதிவு முகாம் இன்று (02-02-2013) முதல் துவங்கியுள்ளது. இந்த முகாம் 10 நாள்கள் நடக்கும் என கூறப்படுகிறது.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தேசிய அளவிலான அடையாள அட்டை (Aadhaar - ஆதார்) வழங்குவதற்காக, குடிமக்கள் அனைவரும் தங்களுடைய தகவலை பதிவு செய்யவேண்டி ஒவ்வொரு பகுதியிலும் புகைப்பட/கைரேகை/விழித்திரை பதிவு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி, சின்னவிளை தொடக்கப்பள்ளி, மகளீர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் இதற்கான முகாம் இன்றிலிருந்து நடத்தப்படுகிறது.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அடையாள
அட்டை பதிவு செய்த காட்சி
இதுபற்றிய தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:- “2010-ம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சாதாரணமாக வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து குடும்ப நபர்களிடமும் புகைப்படம், கைரேகை மற்றும் விழித்திரை பதிவுகள் ஆகியவற்றை சேகரிப்பதற்கு உங்களுடைய பகுதிக்கு இதற்கான முகாம் நடத்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் முகாம்களில் கலந்து கொண்டு மேற்கண்ட விவரங்களை வழங்க 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் மற்றும் 2003-ம் ஆண்டு விதிகளின்படி அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் பதிவு செய்யப்பட்ட காட்சி
உங்களுடைய குடியிருப்புக்கு அருகாமையில் இதற்கான முகாம் நடைபெறும் போது, அங்கு நீங்கள் நேரடியாக சென்று உங்களுடைய பதிவுகளை செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:- மணவாளக்குறிச்சி பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள், “தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இடம் பெற்று பிரத்தியோக அடையாள எண் பெற இந்த வாய்ப்பை தவறவிடாமல் உங்களின் விபரங்களை சேர்த்து குடியிருப்போர் அட்டை பெறும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்”

மேலும் இதற்கான தகவலைப்பெற உங்கள் பகுதி வார்டு உறுப்பினரை அணுகவும். இணையதள தகவலுக்கு www.uidai.gov.in இலவச தொலைபேசி எண்: 1800 180 1947

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: