Headlines
மணவாளக்குறிச்சி அருகே 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் அன்னைதெரசா தெருவை சேர்ந்தவர் ஜான்கென்னடி, மீன்பிடி தொழிலாளி. தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஜெனிபர் ஜெறினா (வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி ஜெனிபர் ஜெறினா, நேற்று முன்தினம் மாலையில் தனது தாயாரிடம், தனக்கு அதிக பாடம் படிக்க இருப்பதாக கூறிவிட்டு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். இரவு நீண்டநேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாயார், மகளை தேடி மேல்மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி, அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: