
Surrounded Area
மணவாளக்குறிச்சி பகுதியில் சிம்னிவிளக்கு சரிந்து இளம்பெண் கருகி பலி
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் நித்யா (வயது 21). இவர் பி.எஸ்.சி. முடித்து வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த 15-ம் தேதி வீட்டில் இரவு திடீரென்று மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து நித்யா வீட்டில் இருந்த சிம்னி விளக்கை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக விளக்கு நித்யா மீது சரிந்து விழுந்தது. இதில் தீ நித்யா மீது மளமளவென்று பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து நித்யாவை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் கிருஷ்ணகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: