Headlines
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி 1–ம் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி 1–ம் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் தகவல்

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 1–ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
1–ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக நவம்பர் மாதம் 2–வது சனிக்கிழமை (12–ம் தேதி) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

வருகிற 1–ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: