Headlines
கால்வாயில் குளிக்கும் போது தண்ணீர் இழுத்து சென்ற வாலிபர் பிணமாக மீட்பு

கால்வாயில் குளிக்கும் போது தண்ணீர் இழுத்து சென்ற வாலிபர் பிணமாக மீட்பு

கால்வாயில் குளிக்கும் போது தண்ணீர் இழுத்து சென்ற வாலிபர் பிணமாக மீட்பு
03-02-2016
கேரளமாநிலம் புத்தன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திதின். இவரது தம்பி ஆலன் (வயது 26). இவர் நர்சிங் படித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். தாழக்குடி அருகே சந்தைவிளையை சேர்ந்த நண்பர் சங்கரை பார்க்க திதின் நேற்று முன்தினம் வந்தார். அப்போது அவர், தம்பி ஆலனையும் உடன் அழைத்து வந்தார்.
மாலையில் 3 பேரும் அவ்வையார் அம்மன்கோவில் பின்புறம் உள்ள தோவாளை கால்வாயில் குளிக்க சென்றனர். அங்கு குளித்துக்கொண்டிருந்த போது, ஆலன் கால்வாயில் குதித்து, குதித்து குளித்தாராம் அப்போது அவரை தண்ணீர் இழுத்து சென்றது. திடீரென ஆலனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த திதின், சங்கர் ஆகிய 2 பேரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆலனை கால்வாயில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆலன் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நேற்று காலை பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பிணத்தை மீட்டனர். அப்போது கால்வாயில் குளிக்கும் போது ஆலன் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

உடனே உடலை பிரேத பரிசோதனைக்காக, ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அவருடைய பெற்றோர்களும், நண்பர்களும் அங்கு வந்தனர். அவர்கள் ஆலனின் உடலை பார்த்து கதறி அழுதனர். கால்வாயில் குளித்த வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: