Headlines
Loading...
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா

வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா

வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா
03-06-2015
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா சென்ற மாதம் 31 மற்றும் இம்மாதம் 1-ம் தேதி ஆகிய நாள்களில் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உஷ பூஜை, காலை 6.30 மணிக்கு ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மற்றும் ஸ்ரீமத் சுவாமி கருணானந்தஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொண்ட அகண்ட நாம ஜெப மகாயக்ஞம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
2-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, பகல் 11.30 மணிக்கு அபிஷேகமும், பஜனையும், பகல் 1.30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வருதலும், இரவு 9.30 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளை வெள்ளிமலை ஆலய முன்னேற்ற சங்கம் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.



செய்தி மற்றும் போட்டோஸ்
“புதிய புயல்” முருகன்
மணவாளக்குறிச்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: