Headlines
Loading...
மணவாளக்குறிச்சி பாலம் அருகே டெம்போ–மோட்டார் சைக்கிள் மோதல் 2 பேர் படுகாயம்

மணவாளக்குறிச்சி பாலம் அருகே டெம்போ–மோட்டார் சைக்கிள் மோதல் 2 பேர் படுகாயம்

மணவாளக்குறிச்சி பாலம் அருகே டெம்போ–மோட்டார் சைக்கிள் மோதல் 2 பேர் படுகாயம்
19-05-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சிவந்தமண் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கோபி (வயது 40) மற்றும் மன்மதன் (49). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மணவாளக்குறிச்சிக்கு வந்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி விட்டு, வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலம் அருகே சென்ற போது, எதிரே வந்த டெம்போவும் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட கோபி, மன்மதன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, டெம்போ டிரைவரான ஈத்தாமொழியை சேர்ந்த சகாயதேவன் என்பவரை கைது செய்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: