Headlines
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை

மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை

மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை
21-05-2015
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேனிலைப்பள்ளி 2014-15 ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்வில் 157 மாணவ, மாணவிகள் எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் மேல்நிலை தேர்வில் 317 மாணவ, மாணவியர் எழுதியதிலும் அனைவரும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகள் அபிஷா, அதுல்யா, அக்ஷயா, சஜி 
மாணவி அபிஷா 497/500 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3-ம் இடத்திலும், பள்ளியில் முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றார். மாணவி பெற்ற மதிப்பெண் தமிழ்- 98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. மாணவிகள் அதுல்யா, அக்ஷயா, சஜி ஆகிய 3 பேரும் 495/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

30 மாணவர்கள் அறிவியலிலும், 20 மாணவர்கள் சமூக அறிவியலிலும், 9 மாணவர்கள் கணிதத்திலும் 100/100 மதிப்பெண் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் நசரேத் சார்லஸ், தலைமையாசிரியரும், நல்லாசிரியருமான ஜாண் கிறிஸ்டோபர், நிர்வாக அலுவலர் ஜாண்சன், ஆசிரிய மன்ற செயலாளர் ராஜேந்திரன், ஜெயலெட்சுமி மற்றும் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: