Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது
10-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 9-ம் நாள் திருவிழா நேற்று பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடந்தது. கோவில் நிகழ்ச்சியில் நேற்று காலை 4.30 திருநடை திறக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9 அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், காலை 9.30 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது களபம் பவனி வருதலும், பகல் 1 உச்சிகால பூஜையும் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும் நடைபெற்றது.
சமய மாநாட்டு பந்தலில் காலை 7 மணிக்கு மஹாபாரத தொடர் விளக்க உரையும், காலை 9 மணிக்கு ஈத்தாமொழி திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் சிந்தனை சொல்லரங்கமும், பிற்பகல் 2 மணிக்கு பக்தி இன்னிசையும், மாலை 4 மணிக்கு செதுவூர் நாஞ்சில் சகாதேவன் குழுவினரின் வில்லிசை கச்சேரியும், மாலை 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு குமரி ரெத்ன பிரியா பக்தி இன்னிசை குழு வழங்கிய இன்னிசை பாட்டு மன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: