Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 3006 திருவிளக்கு பூஜை நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 3006 திருவிளக்கு பூஜை நடந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 3006 திருவிளக்கு பூஜை நடந்தது
02-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா நேற்று தொடங்கியது. காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 3006 திருவிளக்கு பூஜையும், ஸ்ரீராஜராஜேஸ்வரி பூஜையும் நடந்தது.
திருவிளக்கு பூஜையை சாரதா நடராஜன் துவங்கி வைத்தார். நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஆகியோர் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர்.
இரவு 8 மணிக்கு இலட்சுமிபுரம் பிரியதர்ஷினி நாட்டியப்பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு சௌபர்னிகா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: