
Manavai News
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பறக்கும் காவடி பவனி
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பறக்கும் காவடி பவனி
25-02-2015
மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் மற்றும் யானையை வரவழைத்த பிள்ளையார்கோவில் ஆகிய கோவில்களில் இருந்து பறக்கும் காவடி, புஷ்பக் காவடிகள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது.
நேற்று முன்தினம் காலையில் இருந்து வேல்தரித்த பக்தர்கள் மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடக்கன்பாகம், சக்கப்பத்து, ஆண்டார்விளை, பீச்ரோடு, தருவை, பிள்ளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக, செண்டைமேளங்கள் முழங்க சென்றனர்.
மாலை சுமார் 5 மணி அளவில் அனைத்து காவடிகளும் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் இருந்து புறப்பட்டு, மணவாளக்குறிச்சி பாலம், சாத்தன்விளை, அம்மாண்டிவிளை, வெள்ளமடி, கணபதிபுரம், இராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் சென்றது. காவடி பவனியை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்
மணவாளக்குறிச்சி
0 Comments: