Headlines
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு 26-ம் வருட காவடி பவனி: பக்தர்கள் விரதம் இருந்தனர்

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு 26-ம் வருட காவடி பவனி: பக்தர்கள் விரதம் இருந்தனர்

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு 26-ம் வருட காவடி பவனி: பக்தர்கள் விரதம் இருந்தனர்
17-02-2015
மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை பக்தர்கள் குழு நடத்தும் 26-வது வருட காவடி பவனி விழா நிகழ்ச்சி வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் விரதம் ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கினர்.
22-ம் தேதி அன்று காலை 5 மணிக்கு கண்ணன் போற்றி நடத்தும் கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு தீபாராதனை, மாலை 4 மணிக்கு நாதஸ்வர நையாண்டி மேளம், மாலை 6 மணிக்கு வேல்தரித்தல், இரவு 7.15 மணிக்கு மாதவிளை கவியரசு கண்ணதாசன் கலை மன்றம் வழக்கும் வழக்காய்வு மன்றம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.
23-ம் தேதி நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு பக்தி கானம், 6.30 மணிக்கு காவடி பவனி வருதல் நிகழ்ச்சியை மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன்ஜி தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார். பின்னர் காவடி பவனி மணவாளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பவனி வருகிறது. மதியம் 1 மணிக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு காவடி பவனி திருச்செந்தூருக்கு செல்கிறது.
3 அடி வேல் காவடி செல்வபிரகாஷ், புஷ்பகாவடி பிரதீப், சிவா, ராம்கி, புவனேஷ், கார்த்திக், பிரசாந்த், சேகர் ஆகியோர் எடுக்கின்றனர். நிகழ்ச்சிக் ஏற்பாடுகளை செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை பக்தர்கள் குழு செய்துள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: