Headlines
குளச்சல் அருகே கடலில் வள்ளம் கவிழ்ந்து மீனவர் பரிதாப சாவு

குளச்சல் அருகே கடலில் வள்ளம் கவிழ்ந்து மீனவர் பரிதாப சாவு

குளச்சல் அருகே கடலில் வள்ளம் கவிழ்ந்து மீனவர் பரிதாப சாவு
25-02-2015
குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் கஸ்பார் (வயது 54), மீனவர். இவர் நேற்று முன்தினம் மாலை பைபர் வள்ளம் மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றார். வெகுநேரமாகியும் கஸ்பார் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை பைபர் வள்ளத்தில் கஸ்பாரை தேடி கடலுக்கு சென்றனர்.
அப்போது 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் கஸ்பார் பிணமாக மிதப்பதை பார்த்தனர். உடனே அவரது உடலை மீட்டு கோடிமுனை கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து குளச்சல் கடலோர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில் கஸ்பார் மீன் பிடிக்க சென்ற பகுதியில் காற்று அதிகமாக வீசி வள்ளம் கவிழ்ந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்’.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: